நாசரேத் அருகேயுள்ள அகப்பைகுளத்தில் இந்து முன்னணி கிளை கமிட்டி சார்பில் இந்துக்கள் ஒற்றுமைக்காகவும், நாட்டில் பயங்கரவாதம் ஒழிய வேண்டும் என்பது உள்ளிட்ட வேண்டுதல்களுக்காவும் பாரத மாதா பூஜை வழிபாடு நடைபெற்றது.
பூஜைக்கு நாசரேத் நகரத் தலைவர் வெட்டும்பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் பெ. சக்திவேலன் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். இதில் பாரத மாதா உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், அமைப்பின் பொறுப்பாளர்கள் சரவணன், சங்கர், மேகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.