பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞர் கைது

கோவில்பட்டியில் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கோவில்பட்டியில் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

விளாத்திகுளத்தையடுத்த ரகுராமபுரத்தைச் சேர்ந்த ஜானகிராமன் மனைவி அழகு ராமலட்சுமி(23). இவர், பொங்கல் பண்டிகைக்காக கோவில்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தாராம்.
இந்நிலையில், அந்த தெருவில் உள்ள மதுபானக் கூடத்தை அவர் செல்ல முயன்றாராம். அப்போது, அவரை முன்விரோதம் காரணமாக நடராஜபுரம் ஆறுமுகம் மகன் மதன்(22), ஆறுமுகப்பாண்டி மகன் ராஜதுரை ஆகிய இருவரும் அவதூறாகப் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனராம்.
தாக்குதலில் காயமடைந்த அழகுராமலட்சுமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, மதனை சனிக்கிழமை கைது செய்தனர். ராஜதுரையை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com