குலசேகரன்பட்டினத்தில் காவடி பிறைத் தெரு,மங்களாபுரம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி கோலமிடுதல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
காவடிபிறைத் தெரு காமராஜர் இளைஞர் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவிற்கு அமைப்பின் தலைவர் சிவபாலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் திருப்பதி, ராஜா, கார்த்தீசன், சரவணன், கண்ணன், ஆனந்த், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோலப் போட்டி மற்றும் விளையாட்டு விழாக்களில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாஜக மாவட்டச் செயலர் ரா.சிவமுருக ஆதித்தன் பரிசுகளை வழங்கிப் பேசினார். மங்களபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு குலசேகரன்பட்டினம் நகர பாஜக துணைத்தலைவர் செல்வா, துணைச் செயலர் அருள்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்,பாஜக மாவட்டச் செயலர், உடன்குடி ஒன்றியச் செயலர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.