கோவில்பட்டியையடுத்த முடுக்குமீண்டான்பட்டியில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவர் மன்றத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற பொருளாளர் முத்துராஜ் முன்னிலை வகித்து, திருவள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கரிசல்குளம் அரசுப் பள்ளித் தமிழாசிரியர் ஜெகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து, மாணவர்-மாணவிகள் திருவள்ளுவர் வேடமணிந்து அணிவகுத்தனர்.
மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்பித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றோருக்கும், திருவள்ளுவர் வேடமணிந்த மாணவர் - மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் லோகிதாசன், நாட்டாண்மை லட்சுமணன், பால்ராஜ், குருசாமி, விஜயன், முத்துராஜ், மாணவர், மாணவிகள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.