சாகுபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
 திருச்செந்தூர்-தூத்துக்குடி- மதுரை சாலையில் செல்லும் வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி, நிறுவன செயல்உதவி தலைவர் ஜெயக்குமார் (பணியகம்) தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது அந்தவழியாக சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
 நிகழ்ச்சியில் செயல் உதவித்தலைவர் சுபாஷ் டாண்டன் (காஸ்டிக் சோடா பிரிவு), மூத்த பொதுமேலாளர்கள் சுந்தர், சந்துரு, பொதுமேலாளர் முரளி, துணைப் பொதுமேலாளர்கள் கணேசன், கதிர்வேல், ஹரிகரன், தலைமை பாதுகாப்பு அதிகாரி வெங்கடேஷ், துணை மேலாளர் (பாதுகாப்பு துறை) அனந்தகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com