கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தைத்திருநாளை முன்னிட்டு திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலர் சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், தங்கச்சாமி, ஒன்றியப் பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் அ.சுப்பிரமணியன் லாயல் மில் காலனி, லிங்கம்பட்டி, சண்முகசிகாமணி நகர், கீழப்பாண்டவர்மங்கலம், கரிசல்குளம், செண்பகப்பேரி, கிழவிபட்டி ஆகிய இடங்களில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் சோழபெருமாள், ஊராட்சி முன்னாள் தலைவர் பச்சமால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.