தூத்துக்குடியில் 19இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில்,  விவசாய சங்கத் தலைவர்களும், பாசன சங்கப் பிரதிநிதிகளும் மற்றும் விவசாயிகளும் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com