கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சங்கரன்கோவில் வட்டம், குருவிகுளம், அழகுனேரியைச் சேர்ந்த அந்தோணி மனைவி செல்லம்மாள் (58). கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த இவர் செவ்வாய்க்கிழமை ஊருக்கு திரும்புவதற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வாகனம், செல்லம்மாள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.