இளம்புவனத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள்

எட்டயபுரம் அருகே இளம்புவனத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்டார் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

எட்டயபுரம் அருகே இளம்புவனத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்டார் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இளம்புவனம் இளைஞர் பேரவைத் தலைவர் கே. மாயக்கண்ணன் தலைமை வகித்தார். பேரவைச் செயலர் முத்தையா முருகன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 20-க்கும்மேற்பட்ட முக்கிய கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன.
அரசு ஒப்பந்ததாரர் பெருநாழி அருண் பாலாஜி, இளம்புவனம் ஊராட்சித் தலைவர் கணேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் பேச்சியப்பன் ஆகியோர் போட்டிகளை தொடங்கிவைத்தனர்.
தூத்துக்குடி பென்கின் புளு கிரிக்கெட் அணி முதலிடத்திலும், இளம்புவனம் ஸ்டார் பாய்ஸ் கிரிக்கெட் அணி இரண்டாமிடத்திலும், விளாத்திகுளம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி அணி மூன்றாமிடத்திலும் வென்றது.
வெற்றிபெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 9ஆயிரத்து 17, பரிசுக் கோப்பையும், இரண்டாம் பரிசாக 7 ஆயிரத்து 17 ரூபாயும் பரிசுக் கோப்பையும், மூன்றாம் பரிசாக 5 ஆயிரத்து 17 ரூபாயும் பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.
எட்டயபுரம் காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
ஏற்பாடுகளை இளம்புவனம் ஸ்டார் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com