எம்ஜிஆர் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், அவரது

எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, எட்டயபுரம் சாலையில் உள்ள முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.  அதன்பிறகு 1 ஆம் ரயில்வே கேட் காந்தி சிலை அருகில் எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, சில்வர்புரத்தில் உள்ள லூசியா மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் உள்ள மாணவர்,  மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதேபோல, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் குழு சார்பில், முன்னாள் மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக சார்பில் மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவில்பட்டியில்....
முன்னாள் நகரச் செயலர் சங்கரபாண்டியன் தலைமையில், எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் அமிர்தராஜ்பாண்டியன், ரவிச்சந்திரன், செண்பகராமன், மாரியப்பன், திவான்பாட்ஷா, கமலக்கண்ணன், செல்லத்துரை, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கயத்தாறில்.... எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலர் செல்வகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, சுமை தூக்கும் தொழிலாளி மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு வேஷ்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நகரச் செயலர் கப்பல் ராமசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலர் ஆசூர் காளிப்பாண்டியன், ஒன்றிய மாணவரணிச் செயலர் சங்கரசுப்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாத்தான்குளத்தில்.... அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு, நகர அதிமுக செயலர் என்.எஸ். செல்லத்துரை தலைமையில், எம்எல்ஏ எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், அதிமுக ஒன்றிய செயலர் அச்சம்பாடு த. சவுந்திரபாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பெரியதாழை, தட்டார்மடத்தில் உள்ள  எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆத்தூரில்....
நகரச் செயலர் எம்.பி. முருகானந்தம் தலைமையில், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் ஏ.எம்.எஸ். ஷேக் தாவூது, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் வி. சுப்பிரமணியன், மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலர் ஆர்.எஸ். மணி, ஏ.எம். அனீபா, எம்.ஏ.எப். அமலன், முன்னாள் நகரச் செயலர் கே.பி. ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆறுமுகனேரியில்.....
பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்துக்கு, நகர அதிமுக செயலர் கே.கே. அரசகுரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உப்புத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ். லட்சுமணன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் சி. மகராஜன், ஜெய்சங்கர், கே.பி. சந்திரன், எம். மந்திரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com