திருச்செந்தூரில் கார், ஆட்டோக்கள் சேதம்

திருச்செந்தூரில் வீடுகளின் முன்பு நிறுத்தியிருந்த கார் மற்றும் ஆட்டோக்களை நள்ளிரவில் சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூரில் வீடுகளின் முன்பு நிறுத்தியிருந்த கார் மற்றும் ஆட்டோக்களை நள்ளிரவில் சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன் (41), கிருஷ்ணசாமி (42), சண்முகம் (35) மற்றும் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தவசிராஜன் (45) இவர்களது கார் மற்றும் ஆட்டோக்களை தங்களது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார் மற்றும் ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரின் கோயில் காவல் ஆய்வாளர் பெரி. லட்சுமணன் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உதவிகளுடன் வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com