கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

சுகாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

சுகாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சி துரைசிங்கம் நகரில் கழிவுநீர் தெருக்களில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, டெங்கு உள்ளிட்ட மர்ம நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் சுகாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையிலான  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சேவகப்பாண்டியிடம் அளித்தனர்.
இதில், கட்சியின் தாலுகா உதவிச் செயலர் பாபு, நகரப் பொருளாளர் ராஜு, மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரோஜா, நகர உதவிச் செயலர் சங்கரப்பன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com