சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் நேரு இளையோர் மையம், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் ஆகியன சார்பில் இளையோர் வார விழாவை முன்னிட்டு, கலை, விளையாட்டுப் போட்டிகள், உழவாரப் பணி மற்றும் மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கர் அறக்கட்டளை இயக்குநர் வீரமுருகபெருமாள் தலைமை வகித்து பேசினார். விவேகானந்தர் நற்பணி மன்ற பொருளாளர் ஆழ்வார்தாஸ் வரவேற்றார். கலை மற்றும் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு முன்னாள் ஊராட்சி உறுப்பினர் சுந்தரராஜ் பரிசுகள் வழங்கினார்.
இதில், முன்னாள் தேசிய இளையோர் படை தொண்டர் சுடலைமுத்து, சமூக ஆர்வலர்கள் திலிப்குமார், சிவமூர்த்தி, பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விவேகானந்தர் நற்பணி மன்ற துணைத் தலைவர் ஆயிரம்தாஸ் நன்றி கூறினார்.