ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆத்தூரில் சுற்றுப்பகுதி இளைஞர்கள் இணைந்து வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, போராட்டக் களத்திற்கு இளைஞர்கள் இரண்டு காளைகளையும் கொண்டுவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்தக் காளைகளை ரேக்ளா சாரட் வண்டியில் பூட்டிய இளைஞர்கள் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக ஆத்தூர் சிவன்கோயில் வரை சென்று போராட்டத்தை முடித்தனர்.
இன்று கடையடைப்பு: ஆத்தூர், ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.