தூத்துக்குடி, உடன்குடி, கோவில்பட்டியில் ஜனவரி 21 மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி, மாநகரப் பகுதி,உடன்குடி, கோவில்பட்டி பகுதியில் சனிக்கிழமை (ஜன.21)மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி, மாநகரப் பகுதி,உடன்குடி, கோவில்பட்டி பகுதியில் சனிக்கிழமை (ஜன.21)மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் எம். ரீட்டா மரிய செல்வகுமாரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், தூத்துக்குடி ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1, 2ஆம் ரயில்வே கேட்டுகள், மட்டக்கடை, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபிள்யூ.ஜி.சி சாலை, ஜார்ஜ் சாலை, சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், அன்னை தெரசா நகர், ராஜீவ் நகர், மில்லர்புரம், அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, சிதம்பர நகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார்புரம், திருச்செந்தூர் சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன்குடியில்.. உடன்குடி,செம்மறிக்குளம் உப மின்நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி இத்துணை மின் நிலையத்தைச் சேர்ந்த உடன்குடி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, உதிரமாடன் குடியிருப்பு, செட்டியாபத்து, செட்டிவிளை, அன்பின்நகரம், வாகைவிளை, மானாடு, லட்சுமிபுரம், கொட்டங்காடு, தேரியூர், ஞானியார்குடியிருப்பு, தைக்காவூர், அணைத்தலை, ராமசாமிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என இருக்காது என மின்தொடர் கழக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில்..கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முகம்மதுசாலிஹாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி ஆகிய பகுதிகளிலும், விஜயாபுரி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, சிட்கோ துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட முத்துநகர், சிட்கோ, ஜோதி நகர், புதுரோடு, சிவஞானபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சிவஞானபுரம், வாகைதாவூர், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி மற்றும் செட்டிக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளங்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9  மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
 இதுபோல, கழுகுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கழுகுமலை, வேலாயுதபுரம், கரடிகுளம், ஓலைகுளம், வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வெறான் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர் மற்றும் சூரங்குடி,
எம்.துரைசாமி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட வானரமுட்டி, காளாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்த்தலைவன்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிற்கல் 1 மணி முதல் மாலை 5  மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com