மீனவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

தூத்துக்குடியில் மீனவர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மீனவர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி செயின்ட்மேரீஸ்காலனி 7 ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், சொந்தமாக படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 16 ஆம் தேதி ராஜேந்திரன் தனது மனைவி சுகந்தியுடன் திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், புதன்கிழமை ஊர் திரும்பிய ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம  நபர்கள் பீரோவில் இருந்த ரூ.  3 லட்சம் ரொக்கம் மற்றும் 4 பவுன் தங்க நகைகள் மற்றும் மின்னணு பொருள்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் செய்தார். வழக்குப் பதிந்த போலீஸார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com