பீட்டா அமைப்பை தடை செய்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி, ஆழ்வார்திருநகரியில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வியாபாரிகள் சங்கத்தினர் காலை முதல் மாலை 6 மணி வரை கடைகளை அடைத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கிராம சாவடி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய லீக் மாநில துணைப் பொதுச் செயலர் முகமது நவாஸ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி ஒன்றியச் செயலர் சுடலை முன்னிலை வகித்தார். இந்திய தேசிய லீக் மாவட்டச் செயலர் சலீம் பாதுஷா, சட்டப்பேரவைத் தொகுதிச் செயலர் பாதுஷா, இந்திய தவ்ஹீத் ஜஅமாத் மாவட்ட துணைச் செயலர் பாசில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.