காமராஜ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 35ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 35ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் எம்.கோட்னீஸ், மாணவர்} மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு, தேசியக் கொடியேற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். பின்னர், போட்டிகளில் வென்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொழிலதிபர் திலகரத்தினம் ஒலிம்பிக் கொடியையும், பள்ளிச் செயலர் செந்தில்கனிராஜா பள்ளிக் கொடியையும் ஏற்றினர். உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளிப் பொருளாளர் செல்வம், காமராஜ் இன்டர்நேஷனல் அகாதெமி பள்ளிச் செயலர் கண்ணப்பன், நாடார் உறவின்முறை சங்கச் செயலர் ராஜேந்திரபிரசாத், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் மாணிக்கவாசகம், எஸ்.கண்ணன், கே.கண்ணன், ரவிமாணிக்கம், கணேசமூர்த்தி, சாமிராஜன், ஆர்.எஸ்.முருகன் மற்றும்  மாணவர்- மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி வரவேற்றார். ஆசிரியை பிரியா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com