வேம்பார் - பருவக்குடி சாலை விரிவாக்க பணிக்காக கோவில்பட்டி புதுரோடு சாலையில் மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்படுவதால், சனிக்கிழமை (ஜன.21) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுரோடு, மில் தெரு, காளியப்பர் தெரு, ஆழ்வார் தெரு, செல்லப்பாண்டியன் தெரு, பங்களாத் தெரு, எட்டயபுரம் சாலை, தெற்கு பிரிவிற்கு உள்பட்ட சுப்பிரமணியபுரம், ஸ்டாலின் காலனி, வக்கீல் தெரு, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை ரோடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.