ஸ்ரீவைகுண்டத்தில் சாலைப் பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அரசுப் போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் சுரேஷ்குமார், மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பயணிகளிடம் வழங்கப்பட்டது. பயணச்சீட்டு ஆய்வாளர்கள் சுப்ரமணியன், வள்ளிநாயகம், டிரைவிங் ஆய்வாளர் பாஸ்கர், அண்ணா தொழிற்சங்கத்தினர், நேதாஜி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.