அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சுந்தரராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க காரணமாக இருந்த அதிமுக பொதுச்செயலர் சசிகலாவுக்கும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவிப்பது என்றும், அதிமுகவில் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்லூரி மாணவர், மாணவிகளை அதிகளவில் அதிமுகவில் சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மாநில பனை வெல்ல கூட்டுறவு இணையத் தலைவர் தாமோதரன், மாவட்டப் பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், மாநில மீனவர் கூட்டுறவு சங்க இணை இயக்குநர் அகஸ்டின், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் யு.எஸ். சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com