கணிதவியல் துறை மன்றக் கூட்டம்

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில்  கணிதவியல் துறையின் சிறப்பு மன்றக்கூட்டம் நடைபெற்றது.

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில்  கணிதவியல் துறையின் சிறப்பு மன்றக்கூட்டம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜே. எல்லோரா  தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியை  வி. சுப்பிரபா அறிமுக உரையாற்றினார். பாளையங்கோட்டை, சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் கணிதவியல் துறையின் உதவிப் பேராசிரியர் என். முகமது ரில்வான் போட்டித் தேர்வுகளை நோக்கும் அணுகுமுறை பற்றி உரையாற்றினார்.
இதையொட்டி, முதுகலை பயிலும் கணிதத்துறை மாணவிகளுக்கிடையே விளக்கக்காட்சி உரைப்போட்டி நடைபெற்றது. சி. நந்தினி வரவேற்றார். இரண்டாம் ஆண்டு மாணவி பாளையம் நபீஸத் ஆமினா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com