கோவில்பட்டியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, கோவில்பட்டி போக்குவரத்து காவல் துறை சார்பில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, கோவில்பட்டி போக்குவரத்து காவல் துறை சார்பில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணிவீர் விபத்தை தடுப்பீர், தலைக்கவசம் அணிவீர் எமனையும் வென்றிடுவீர், வாகனம் ஓட்ட தலைக்கவசம் அணிவீர் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில்பட்டி போக்குவரத்து காவல் துறை சார்பில் மாதாங்கோவில் தெரு சந்திப்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி. முருகவேல் தலைமை வகித்து, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார். மேலும், தலைக்கவசம் அணியாமல் செல்லும் ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிய வலியுறுத்தி அறிவுரை வழங்கினார். மேலும், தலைக்கவசத்துடன் வாகனம் ஓட்டுபவர்களை டி.எஸ்.பி. பாராட்டினார்.
நிகழ்ச்சியில், காவல் துறை ஆய்வாளர் பவுல்ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து, காவல் உதவி ஆய்வாளர்கள் சுகாதேவி, நவநீதன் மற்றும் போக்குவரத்து போலீஸார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com