கழுகுமலை துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(ஜன.24) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ள அறிக்கை: கழுகுமலை துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணி நடைபெறவிருப்பதால் கழுகுமலை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கழுகுமலை, குருவிகுளம், வெள்ளப்பனேரி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.