பேய்க்குளம் அருகே உள்ள ரெட்டார்குளத்தில் இந்து முன்னணி சார்பில் பாரத மாதா பூஜை வழிபாடு மற்றும் சமுதாய சமர்ப்பண தினவிழா நடைபெற்றது.
கணபதி தலைமை வகித்தார். ஆத்திமுத்து வரவேற்றார். இதில் மாநில இந்து முன்னணி நிர்வாகக்குழு உறுப்பினர் மாயகூத்தன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.முருகேசன் ஆகியோர் பேசினர்.
இதில் பாரத மாதா படத்துக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றோர் கூட்டாக நின்று உறுதி மொழி ஏற்றனர். இதில் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத் தலைவர் முத்துராமன், பொதுச் செயலர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.