ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எதிர்கால வாக்காளர்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வட்டாட்சியர் செல்வ பிரசாத் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முத்துசிவன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாகவும், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு தேர்தல் துணைவட்டாட்சியர் கோபால கிருஷ்ணன் பதிலளித்தார். நிகழ்ச்சியில் தேர்தல் உதவியாளர் முத்துராமன், தேர்தல் கணினி இயக்குநர் பிரின்ஸ், வருவாய் ஆய்வாளர் சுடலைவீரபாண்டியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.