குலசேகரன்பட்டினம் அருள்மிகு உதயமார்த்தாண்ட விநாயகர் கோயில் நிர்வாகம் சார்பில் இந்து சமய பண்பாட்டு விழா நடைபெற்றது.
புலமுத்து தலைமை வகித்தார். இந்து சமய பெருமைகள், இந்து ஒற்றுமை, பாரத நாட்டின் பழம்பெருமைகள் ஆகியவை குறித்து பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன. இந்து சமயத்தை முன்னேற்றுவதில் மக்களின் பங்களிப்பு குறித்து தமிழறிஞர் முத்தரசு,சிவனடியார்கள் இல்லங்குடி, சங்கரன், முத்து க்குமாரசுவாமி ஆகியோர் பேசினர்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகிகள் சண்முகம், பழனீஸ்வரன், சண்முகசுந்தரம், சுயம்பு,சிதம்பரம், சங்கரலிங்கம், சுப்பையா ஆகியோர் செயதிருந்தனர்.