இலவச சைக்கிள் வழங்கும் விழா

கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பள்ளியில் பயிலும் 128 மாணவர், மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.  நிகழ்ச்சியில், பள்ளி மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு வரவேற்றார். தலைமையாசிரியை சுகந்தி லிதியாள் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com