குடியரசு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜன. 26) மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியரசு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மற்றும் உரிமத்தில் உள்ள பார்கள் அனைத்தும் வியாழக்கிழமை (ஜன. 26)மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றையதினம் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.