குழந்தையிடம் சங்கிலியை பறித்த பெண் கைது

திருச்செந்தூரில் குழந்தையின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

திருச்செந்தூரில் குழந்தையின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் வீரராகவபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (68). இரு தினங்களுக்கு முன் இவர் தனது பேத்தியுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்றாராம். தூண்டுகை விநாயகர் கோயில் பகுதியில் சென்றபோது பேத்தி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பெண் ஒருவர் பறித்துக்கொண்டு ஓடினாராம். இதை பார்த்த அங்குள்ளவர்கள் அந்தப் பெண்ணை விரட்டிச்சென்று பிடித்து திருக்கோயில் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த பெண் காயல்பட்டினம் வீரசடைச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சொர்ணவடிவு (51) என்பது தெரியவந்தது.   இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸார் அவரை செய்து சங்கிலியை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com