சைவ வேளாளர் ஐக்கிய சங்க கூட்டம்

திருச்செந்தூரில் நடைபெற்ற சைவ வேளாளர் ஐக்கிய சங்கக் கூட்டத்தில் பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடைசெய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்செந்தூரில் நடைபெற்ற சைவ வேளாளர் ஐக்கிய சங்கக் கூட்டத்தில் பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடைசெய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்துக்கு, க. வேலாயுதம் பிள்ளை தலைமை வகித்தார். செயலர் ப. சந்தணராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் சுதந்திர போராட்ட வீரர் பி.எஸ். பொன்னையா பிள்ளை, தியாகி சண்முகம் பிள்ளை மனைவி முத்துலட்சுமி அம்மாள், முன்னாள் சங்கத் தலைவர் எஸ். ராமன் மற்றும் அவரது தாயார் எஸ். ஆறுமுகத்தம்மாள், முன்னாள் நிர்வாகஸ்தர் எஸ். முத்துக்குமார் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற வண்ணதாசனுக்கு பாராட்டு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகஸ்தர்கள் க. மெய்கண்டமுத்து, சோ. பரமேஸ்வரன், ச. இசக்கிமுத்து, நெ. ஆனந்தராமச்சந்திரன், பொ.வெ. பொன்முருகேசன், எஸ். சீனிவாசன், சு. முத்துக்குமார், வி. சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com