கயத்தாறில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டரை வயதுள்ள பெண் புள்ளி மான் இறந்தது.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையின் தெற்கு பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பெண் புள்ளி மான் ஒன்று இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் மற்றும் வருவாய் ஆய்வாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் வனச்சரக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து, வனச்சரக அலுவலர் சிவ்ராம் தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் சரண்ராஜ், சங்கர் ஆகியோர் சென்று, இறந்த பெண் புள்ளி மான் சடலத்தைக் கைப்பற்றி, கயத்தாறு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சடலத்தை குருமலை காப்பு காட்டுப் பகுதியில் அடக்கம் செய்தனர்.