தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்திதிறன் கொண்ட 5 அலகுகள் (யூனிட்) மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அனைத்து அலகுகளும் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை கடந்துவிட்டதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
இதற்கிடையே, 3 ஆவது அலகில் உள்ள கொதிகலனில் புதன்கிழமை அதிகாலை பழுது ஏற்பட்டதால் அந்த அலகின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் அனல் மின் நிலைய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே, 45 நாள் பராமரிப்பு பணிக்காக 2 ஆவது அலகில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தற்போது அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து: இதற்கிடையே "யார்டு சுவிட்ச்' என்ற பகுதியில் புதன்கிழமை இரவு 11.20 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 1, 4, 5 ஆகிய அலகுகளிலும் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வியாழக்கிழமை முதல் மின் உற்பத்தியைச் சீராக்க பொறியாளர்கள் பணிகளைத் துரிதமாகச் செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com