ராஜபதி ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயிலில் ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை

நவகைலாய தலத்தில் எட்டாவது தலமான, குரும்பூர் அருகே உள்ள ராஜபதி ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ரூ.1.5 கோடி செலவில் ஏழு நிலை கொண்ட

நவகைலாய தலத்தில் எட்டாவது தலமான, குரும்பூர் அருகே உள்ள ராஜபதி ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ரூ.1.5 கோடி செலவில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது .
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு ஸ்ரீவிநாயகர் பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் 10.15-க்கு ராஜகோபுர திருப்பணி வாஸ்து கால்கோள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில்பட்டி கைலாஷ் அறக்கட்டளை மற்றும் இத் திருக்கோயில் தலைவருமான குரு. பாலசுப்பிரமணியன், ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ். லட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com