தூத்துக்குடி அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உள்ளிட்ட இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதூர்பாண்டியாபுரத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முனியசாமி (44), அவரது நண்பரான முத்துக்குமார் (45) ஆகிய இருவரும் கடந்த 23ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். புதியம்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், புதூர்பாண்டியாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் கலையரசன் (27), வேல்சாமி மகன் அஜித்குமார் (23), விஜயபாண்டி மகன் கொடிக்காட்டுராஜா (23), மனோகரன் மகன் மதன்பிரகாஷ் (23), நாகராஜன் மகன் ஆறுமுகசாமி (23), மூக்கையா மகன் மாரிமுத்து (22), வேலுச்சாமி மகன் வசந்தகுமார் (23), முனியசாமி (23) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.