தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் எஸ்.ஞானராஜ் கோயில்பிள்ளை தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் பாரதிமீனா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஜேக்கப்மனோகர் வரவேற்றார். திருச்செந்தூர் வட்டாட்சியர் செந்தூர்ராஜன் 158 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். ஆசிரியர் மைக்கேல் நன்றி கூறினார்.