31இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 31) நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 31) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான குறைதீர் கூட்டம் 31ஆம் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சங்கு கூடத்தில் நடைபெறுகிறது.
 இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்கலாம்.
 பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்பப் பெறுதல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் வங்கிக் கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாமல் இருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காணலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com