ஜனவரி 28 மின்தடை

கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சனிக்கிழமை (ஜன.28) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சனிக்கிழமை (ஜன.28) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  வேம்பார் - பருவக்குடி சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்வதற்காக, கோவில்பட்டி நகர் மற்றும் கிழக்கு விநியோகப் பிரிவுக்குள்பட்ட புதுரோடு, காளியப்பர் தெரு, ஆழ்வார் தெரு, செல்லப்பாண்டியன் தெரு, பங்களாத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com