திமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக வடக்கு மாவட்டச் செயலர் அ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் தாமோதரக்கண்ணன், கணேசன், மேற்கு ஒன்றிய திமுக செயலர் வீ. முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தேர்தல் பணிக்குழுச் செயலர் எல். கணேசன், தலைமைக் கழகப் பேச்சாளர் விஜயரத்தினம், மாவட்டத் துணைச் செயலர்கள் செந்தூர்மணி, ஏஞ்சலா, தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், பொதுக்குழு உறுப்பினர் பா.மு. பாண்டியன் ஆகியோர் பேசினர். மொழிக்காவலர் பா. முத்து வாழ்த்துகளைப் பெற்றார்.
மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர்கள் அமுதா கோபால்ராஜா, சேதுரத்தினம், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் இந்துமதி, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் சோழபெருமாள், இளைஞரணியைச் சேர்ந்த வினோத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கட்சியின் நகரச் செயலர் கருணாநிதி வரவேற்றார். நகர மாணவரணி அமைப்பாளர் பழனிகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கா. மார்ட்டின் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com