மது விற்பனை: 4 பேர் கைது

குடியரசு தினத்தையொட்டி மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

குடியரசு தினத்தையொட்டி மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கயத்தாறு வடக்குத் தெரு ஆசாரிபாலம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை உதவி ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீஸார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கயத்தாறு சாலிவாகனத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (22), மணிகண்டன் (24), வடக்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 16 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர்: குடியரசு தினத்தையொட்டி திருச்செந்தூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வீரபாண்டியன்பட்டினம் ஆட்டோ நிறுத்தத்தில் மது விற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் ஆட்டோவில் பதுக்கிவைத்து மதுவை விற்ற சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் (42) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 28 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com