ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் குளிர்கால பண்புப்பயிற்சி முகாம் குலசேகரன்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் நினைவு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், தூத்துக்குடி தெற்கு மாவட்டங்களில் செயல்படும் ஆர்எஸ்எஸ் ஷாகா பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர். முகாமில் பாரத நாட்டின் பழம் பெருமைகள் குறித்த கலந்துரையாடல், யோகா,சிலம்பம், சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், பல்வேறு விளையாட்டுகள் உள்ளிட்டவை நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநில சேவா பொறுப்பாளர் காமராஜ் பேசினார். இதில், ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ராமகிருஷ்ணன், திருச்செந்தூர் நகர ஆர்எஸ்எஸ் தலைவர் பிரம்மநாயகம், செயலர் நாகராஜன், உடன்குடி ஒன்றிய பசுப் பாதுகாப்பு மைய பொறுப்பாளர் வீரபாண்டியன், மாவட்ட சேவா பொறுப்பாளர் குமரேசன், மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலர் ரா. சந்திரசேகர், உடன்குடி ஒன்றியச் செயலர் முத்துலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.