கழிவுநீர்த் தொட்டி இடிந்து விழுந்து ஒடிஸா இளைஞர் சாவு

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு கழிவுநீர்த் தொட்டியின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் ஒடிஸா மாநில இளைஞர் உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு கழிவுநீர்த் தொட்டியின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் ஒடிஸா மாநில இளைஞர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் அன்னக்குமார் என்பவர் வீட்டில் ஒடிஸா மாநிலம் மல்கன்கிரி பகுதியைச் சேர்ந்த காமாதாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், காமாதாஸின் மகன் துர்போதாஸ் (19), வீட்டின் வெளியே உள்ள கழிவுநீர்த் தொட்டியின் மேற்பகுதியில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென கழிவுநீர்த் தொட்டியின் மேற்பகுதி உடைந்ததில் துர்போ தாஸ்  தொட்டிக்குள் விழுந்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com