கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிலைய அலுவலர் பூவேஸ்வரி தலைமை வகித்தார். மகிழ்வோர் மன்ற புரவலர் நெப்போலியன், ஆசிரியர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்றக் காப்பாளர் துரைராஜ் அறிக்கை வாசித்தார். தமிழக கைத்தறித் துறை இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் பாகை கண்ணதாசன் சிறப்புரையாற்றினார். இதில், மன்ற நிறுவனர் மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ், இயக்குநர்கள் காளிதாஸ், ஜான்கணேஷ், ஆலோசகர் ஹரிகிருஷ்ணன், காப்பாளர் செல்வின், டயனமிக் அரிமா சங்கத் தலைவர் சங்கரநாராயணன், கம்பன் கழக நிறுவனர் செம்மை நதிராஜா, தொழில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மன்றக் காப்பாளர் சேர்மத்துரை வரவேற்றார். மோகன்ராஜ் நன்றி கூறினார்.