முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். கல்லூரி பேராசிரியரும், சங்கச் செயலருமான சிவராமசுப்பு ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக வசந்த், துணைத் தலைவராக மல்லைராஜ், செயலராக மாரிமுத்து, துணைச் செயலராக விஷ்ணுவர்தினி, பொருளாளராக உதயகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிகளை நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியை நாகஜோதி தொகுத்து வழங்கினார். உயிர் வேதியியல் துறைப் பேராசிரியை விஷ்ணுவர்தினி வரவேற்றார். மின்னணுவியல் துறைப் பேராசிரியை கனகலட்சுமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com