விபத்தில் காயமடைந்த தரகர் சாவு

கோவில்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த தரகர் சனிக்கிழமை இறந்தார்.

கோவில்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த தரகர் சனிக்கிழமை இறந்தார்.
கோவில்பட்டி பாரதிநகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் கார் தரகர் திரவிய சங்கர் (61). இவர், வெள்ளிக்கிழமை பைக்கில் எட்டயபுரம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாராம்.
கருங்காலிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, பைக் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்ததில் திரவிய சங்கர் பலத்த காயமடைந்தார். காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com