அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலர் யுஎஸ். சேகர், மகளிரணிச் செயலர் குருத்தாய், அண்ணா தொழிற்சங்க செயலர் ராஜா, மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், முன்னாள் துணை மேயர் பீ. சேவியர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது, மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் தொகுதி வாரியாக பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசிப்பது என முடிவு செய்யப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலர் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com