ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, பயணியர் விடுதி முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, பயணியர் விடுதி முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோணுகால் சாலையில் சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்களை அப்புறப்படுத்தக் கோரியும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனர் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க உறுப்பினர்கள் மற்றும் தோணுகால் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com