மகாத்மா காந்தியின் 70ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவில்பட்டி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு காந்தி நினைவு அறக்கட்டளை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ். வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், அறக்கட்டளை பொருளாளர் வீரபெருமாள், செயலர் திருப்பதிராஜா, உறுப்பினர்கள் ரசாக், கே.டி. சூரியபிரகாஷ், எஸ்.ஏ. கனி, கார்த்திக், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல, இலக்கிய உலா சார்பில், திங்கள்கிழமை தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அதையடுத்து, காந்தி மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ். வேலுச்சாமி தலைமை வகித்தார். காந்தி மண்டப செயலர் திருப்பதிராஜா முன்னிலை வகித்தார். இலக்கிய உலா நிறுவனர் ரவீந்தர் தலைமையில், இலக்கிய உலா உறுப்பினர்கள் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், பி.எஸ்.என்.எல். இளநிலை பொறியாளர் சவரிராஜ், இலக்கிய உலா புரவலர் வினோபா, பிரபாகரன் மற்றும் காந்தி மண்டப அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.