திருச்செந்தூரில் பொதுக்கூட்டம்: திருமாவளவன் பங்கேற்பு

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்க நாள் மற்றும் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்க நாள் மற்றும் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலர் முரசு தமிழப்பன் தலைமை வகித்தார். மண்டல செயலர் சொ.சு. தமிழினியன், மாவட்டப் பொருளாளர் சி.பா. பாரிவள்ளல், மாவட்ட துணைச் செயலர் சா.சு. இந்திரா உள்பட பலர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் ஆ. சங்கத்தமிழன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு, ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரிழந்த முத்துக்குமார் உருவப் படத்துக்கு மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினார்.
கூட்டத்தில் நெல்லை மண்டல செயலர் தமிழ்ப்பாண்டியன், துத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் கதிரேசன், மத்திய மாவட்டச் செயலர் டக்ளஸ், மீனவர் மேம்பாட்டு பேராய மாநிலச் செயலர் ஜெ. நியூட்டன் பர்னாண்டோ, வழக்குரைஞரணி மாநில துணைச் செயலர் அ. சதீஸ்பாலன், ஒன்றிய துணைச் செயலர் மு. தமிழ்பரிதி உள்பட பலர் கலந்துகொண்டனர். நகரச் செயலர் பெரு. மகாராசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com