தூத்துக்குடி
தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
பெரியதாழையில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரியதாழையில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே பெரியதாழை முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி ராணி (60). இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேவாலயத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வீட்டின் முன் வராண்டாவில் தூங்கினாராம். அதிகாலையில் இவரது கழுத்தில் கிடந்த நாலரை பவுன் தங்க நகையை மர்ம நபர் ஒருவர் பறித்து கொண்டு ஓடிவிட்டாராம். இதுகுறித்து தட்டார்மடம் உதவி- ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்.